இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது:
- வாழ்வென்பது உயிர் உள்ளவரை...
- தேவைக்கு செலவிடு...
- அனுபவிக்க தகுந்தன அனுபவி...
- இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி...
- இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை...
- போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை...
- ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை...
- மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
- உயிர் பிரிய தான் வாழ்வு...ஒரு நாள் பிரியும்...
- சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்...
- உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு...
- உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே...
- உன் குழந்தைகளை பேணு...
- அவர்களிடம் அன்பாய் இரு...
- அவ்வப்போது பரிசுகள் அளி...
- அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே...
- அடிமையாகவும் ஆகாதே...
- பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.
- அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்... உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக் கொள்ளலாம் - பொறுத்து கொள். அவர்கள் உரிமையை மட்டும் அறிவர், கடமை ,அன்பை அறியார்.
- அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
- இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால் நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,
- எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே, நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர், எனவே கொடுப்பதை கொடுத்து விடு, தரவேண்டியதை பிறகு கொடு.
- மாற்ற முடியாததை மாற்ற முனையாதே
- மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே...
- அமைதியாக மகிழ்ச்சியோடு இரு...
- பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு...
- நண்பர்களிடம் அளவளாவு...
- நல்ல உணவு உண்டு...
- நடை பயிற்சி செய்து...
- உடல் நலம் பேணி...
- இறை பக்தி கொண்டு...
- குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்...
- இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...
- வாழ்வை கண்டு களி...
- ரசனையோடு வாழ்...
- வாழ்க்கை வாழ்வதற்கே.