4ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
பரமேஸ்வரி கோணேசபிள்ளை 
அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு
ஒளி தருவீர்!

அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் எங்கள் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்

உன் மடிதேடி, எம் தலைசாய்ந்து,
உன் கையிலே உணவருந்தி எல்லாமே மாயமாய்
போனது ஒரு நொடியில் ஆயினும்
உன் நினைவலைகள் தொடரும்
எம் காலம் முடியும் வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்

கருத்துரையிடுக